மீண்டும் நியூசிலாந்தில் 24 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு - இரண்டாம் அலை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் நியூசிலாந்தில் 24 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு - இரண்டாம் அலை?

கொரோனா தொற்று இல்லாத நாடாக நியூசிலாந்து அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதத்துக்கும் மேலாக உலக நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸிலிருந்து விடுபட அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் செய்வதறியாமல் தவித்து வரும் சூழலில் நியூசிலாந்து சிறப்பான நடவடிக்கைகளைக் கையாண்டு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நியூசிலாந்து கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சில தளர்வுகளை அரசு கொண்டுவந்தது. ஆனால், எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

இந்த நிலையில் சிறப்பு அனுமதிகள் இருந்தால் மட்டுமே நியூசிலாந்துக்கு பிற நாடுகளிலிருந்து வர இயலும். இந்த நிலையில் பிரிட்டனிலிருந்து சிறப்பு அனுமதியோடு வந்த இருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.


மேலும் உள்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் கொரோனா தொற்றைக் கவனமாகக் கையாண்டு கட்டுப்படுத்தியதற்காக உலகம் முழுவதும் பரவலாகப் பாராட்டப்பட்டார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா.

நியூசிலாந்தில் 1,506 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். 22 பேர் பலியாகினர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.