LTTE இற்காக சர்வதேசத்தில் குரல் கொடுத்த பிரபல புள்ளி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LTTE இற்காக சர்வதேசத்தில் குரல் கொடுத்த பிரபல புள்ளி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

நோர்வேயின் தலைமை அமைப்பாளரும், விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளருமான நடராஜா சேதுபரன், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (CID) இனரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பும் இலங்கைக்கு வந்த சேதுபரன் பாதுகாப்பு படையினரால் பல சந்தர்ப்பங்களில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுநோய் காரணமாக நோர்வே செல்ல தாமதமாகி, இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் கட்டார் விமான சேவையிலேயே இவ்வாறு நோர்வே செல்ல முற்பட்டுள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்றும், அவரிடமிருந்து காவல்துறை அறிக்கை பெற வேண்டியுள்ளதாகவும் விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி அவர் அதிகாலை 2 மணியளவில் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.

அரியகுனராஜா செல்வா என்ற யாழ்ப்பாணத்தில் வசித்து வருபவர் அளித்த புகாரைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.