ஜும்ஆ மற்றும் கூட்டுத் தொழுகைகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம்; சுகாதார அமைச்சு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜும்ஆ மற்றும் கூட்டுத் தொழுகைகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம்; சுகாதார அமைச்சு அனுமதி!

ஐவேளை ஜமாஅத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகை ஆகியவற்றில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன விடுத்த வேண்டுகோள்களையடுத்தே இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர்களுள் ஒருவரான விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா 22ஆம் திகதியிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சுகாதார விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக 1 மீற்றர் இடைவெளி பேணி ஒரே நேரத்தில் 50 பேர் கூட்டுத் தொழுகைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.