வாள்வெட்டுக்கு சென்றவர்களை மடக்கி பிடித்த இராணுவத்தினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாள்வெட்டுக்கு சென்றவர்களை மடக்கி பிடித்த இராணுவத்தினர்!

யாழ் நாயன்மார் கட்டு பகுதியில் வாள் வெட்டு மோதலுக்கு சென்றவர்களை இராணுவத்தினர் மடக்கி பிடித்துள்ளனர்.

இன்று (19) மாலை நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

குறித்த பகுதியால் 07 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை இராணுவம் வழிமறித்துள்ளது. இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாளும் விசேட அதிரடி படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ் இந்து கல்லுரி மற்றும் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்தவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.