அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமான புதிய கட்டுப்பாடுகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமான புதிய கட்டுப்பாடுகள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் முதல் திறக்கப்படவுள்ளன. ஜுலை மாதம் 6 ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் மாணவர்களின்போக்குவரத்து தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என நேற்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில்கலந்துரையாடப்பட்டுள்ளது . விசேடமாக போக்குவரத்து சேவை வழங்கும் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளஆலோசனைகளுக்கு அமைய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

ஆசன எண்ணிக்கைகளுக்கு மாத்திரம் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும். பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் போதுசுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய சமூக இடைவெளியை பின்பற்றி ஆசனங்களின்எண்ணிக்கைகளுக்கமைய மாத்திரம் மாணவர்களை அழைத்து செல்லுதல், பாடசாலை மாணவர்கள் பயணித்த வாகனங்களில் கிருமிநீக்கம் செய்தல், மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருத்தல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன் பாடசாலை மாணவர்களை அழைத்து பேருந்துகள் உட்பட வாகனங்களின் உரிமையாளர்கள் முகம் கொடுத்துள்ள சிக்கல்கள்தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.