சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் செய்யலாம்! -அனில் ஜசிங்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் செய்யலாம்! -அனில் ஜசிங்க

Sri Lanka health
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் அவர்கள் ஆர்ப்பாட்டங்களை ஈடுபடுவதற்கு தடைவிதிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக உரிமை என தெரிவித்துள்ள அவர் நோய் தொற்று நிலவுகின்ற வேளையில் இந்த உரிமையை இலங்கை மக்களிற்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முக்கவசம் அணிவது, சமூக விலக்கலை பின்பற்றுவது போன்ற சுகாதார வழிமுறைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்பற்றுகின்ற பட்சத்தில் அவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பெருமளவு மக்கள் ஒன்றுகூடுவதை நாங்கள் ஊக்குவிக்காத அதேவேளை ஆர்ப்பாட்டத்திற்காக குறிப்பிட்ட அளவிலானவர்களை பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இந்த கருத்து பொலிஸாரின் கருத்துகளிற்கு எதிரானதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.