கோட்டாபயவை ஜனாதிபதியாக்க பல தியாகங்கள் செய்தோம் – பிரசன்ன ரணதுங்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டாபயவை ஜனாதிபதியாக்க பல தியாகங்கள் செய்தோம் – பிரசன்ன ரணதுங்க

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க தம் தரப்பில் இருந்து பல தியாகங்கள் செய்யப்பட்டன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொம்பே பகுதியில் இன்று (27) இடம்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய அவர், அந்த தியாகங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் அடங்கும் என்றார்.


பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நிறுத்தப்படுவர் என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தங்கள் வேட்பாளராக நிறுத்துமாறு ஸ்ரீ.ல.சு.க.வின் ஆலோசனையை தான் எதிர்த்ததாகவும் அவர் கூறினார்.

தேர்தலில் பெரும்பானமையை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனாலேயே அவர்கள் எம்மோடு இணைந்து கொண்டார்கள் என சுட்டிக்காட்டிய பிரசன்ன ரணதுங்க அவர்கள் கட்சியில் இருந்து விலகுவதற்கு முன்பு, கடந்த காலத்தில் ஸ்ரீ.ல.சு.க.வின் ஒரு பகுதியினராக இருந்தனர் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மொட்டு சின்னத்தின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பியதால், ஸ்ரீ.ல.சு.க.வின் மாவட்ட பிரதிநிதிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மொட்டு சின்னத்தின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்கள் ஒரு நிலையான கருத்தை கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கட்சிக்கு துரோகம் இழைத்ததாக ஸ்ரீ.ல.சு.க.யின் மாவட்ட பிரதிநிதிகள் கூறி வருவதையும் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.