மாலைதீவு திறக்கப்படுகின்றது; இலங்கையர்கள் பணிபுரியலாம்: பிரதமரிடம் மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாலைதீவு திறக்கப்படுகின்றது; இலங்கையர்கள் பணிபுரியலாம்: பிரதமரிடம் மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக்கிற்கும் (Omar Abdul Razzak) இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

கொவிட் – 19 தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மாலைதீவு எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.


இந்நிலையில், மாலைத்தீவில் ஹோட்டல் துறையில் தொழில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமையைப் போன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என உயர் ஸ்தானிகர் பிரதமரிடம் அறிவித்துள்ளார்.

மாலைத்தீவில் உள்ள இலங்கையர்களின் தகவல் தொடர்பில் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் கேள்வி எழுப்பினார். வெளிவிவகார அமைச்சின் தகவலுக்கமைய இலங்கை பணியாளர்கள் 15000-20000க்கும் இடையிலானோர் மாலைத்தீவில் பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.