ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு எதிராக வெறுப்புச் பேச்சுகள் நிகழ்த்திய, மெடில்ல பஞ்ஞாலோக தேரருக்கு கொழும்பு மாவட்ட நீதவான் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.
தேரரின் செயற்பாடு தனக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக கூறி, அலி சப்ரி 150 இலட்சம் 1.5 கோடி ரூபாவை நஷ்டஈடாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
மாவட்ட நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சமூக ஊடகம், அச்சு இலத்திரனியல் ஊடகங்களிலே வெறுப்புப் பேச்சுகளை பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம் சுமத்தப்படுகின்றது என நீதவான் அறிவித்தார்.
-நவமணி