றினோசாவுக்கு கொரோனா தொற்று இல்லாமலே, உடல் எரிக்கப்பட்டமை அம்பலம்! (ஆதாரம் இணைப்பு) ஜனாதிபதிக்கும் முறைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

றினோசாவுக்கு கொரோனா தொற்று இல்லாமலே, உடல் எரிக்கப்பட்டமை அம்பலம்! (ஆதாரம் இணைப்பு) ஜனாதிபதிக்கும் முறைப்பாடு!

பாத்திமா றினோசா
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்த பாத்திமா றினோசாவுக்கு கொரோனா என அறிவிக்கப்பட்டவருக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical Laboratory Science என அழைக்கப்படும் இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞான சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் இன்று (07) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

மட்டக்குளி பிரதேசத்தினைச் சேர்ந்த 52 வயதான பாத்திமா றினோசா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தாக தெரிவித்து அவரது ஜனாஸா தகனம் செய்யப்பட்டது.

இதன்போது அவரது மகன் ஒருவர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் குறித்த பெண்மனிக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல், கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட ராஜகிரிய – பண்டராநாயக்கபுர, கொலன்னாவ மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுகூடம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞான சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இன்று கடிதமொன்றினை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தகவல் - ஜப்னா முஸ்லீம்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.