சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை!

சனத் பூஜித
இந்த முறை நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் வெளியிடும் உத்தியோகர்பூர்வ அறிவித்தல்களில் மாத்திரம் நம்பிக்கை கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறு பரீட்சாத்திகள் உள்ளிட்ட அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கவனத்திற்கொண்டு கல்வி சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆனால் ஒரு சிலர் போலி செய்திகளை பரப்புவதை எண்ணி கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே மேற்குறித்த செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.