மொபைல் போன் சார்ஜில் இட்டவாரே கேம் விளையாடியவர் மின்சாரம் தாக்கி பலி! தாய்லாந்தில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொபைல் போன் சார்ஜில் இட்டவாரே கேம் விளையாடியவர் மின்சாரம் தாக்கி பலி! தாய்லாந்தில் சம்பவம்!

தனது ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்தவாறே அதில் கேம் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்தின் வட பிராந்தியத்திலுள்ள நான் எனும் நகரைச் சேர்ந்த தின்னகோர்ன் ரத்தனப்பான் எனும் 32 வயதான இளைஞரே தனது வாடகை அறையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞர் இரு தினங்களாக வேலைக்கும் செல்லாமல் எங்கும் தென்படாததை உணர்ந்த அவரின் நண்பர் ஒருவர் குறித்த அறைக்கு சென்று பார்த்தபோது, அவரது நண்பன், தின்னகோர்ன் படுக்கையில் கிடப்பதை ஜன்னலுக்கு ஊடாக கண்டார்.

அவரை எழவைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதையடுத்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

தின்னகோர்னை பரிசோதித்த அதிகாரிகள் அவர் இரு தினங்களுக்கு முன்பே இறந்திருக்கக்கூடும் எனத் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கியே அவர் உயிரிழந்துள்ளார் என நம்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தின்னகோர்னின் குறித்து அவரின் நண்பர்கள் கூறுகையில், அவருக்கு எதிரிகள் எவருமில்லை. பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஆனால், அவர் எந்நேரமும் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிக்கொண்டிருப்பார் எனத் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.