திருடர்களால் ஒரு போதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது! -அசாத் சாலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருடர்களால் ஒரு போதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது! -அசாத் சாலி

திருடர்கள் மாறி மாறி ஆட்சி செய்வது முடிவுக்கு வரும் வரையில் நாட்டை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

"நாங்களும் திருடர்கள் நீங்களும் திருடர்கள் என கூறி இரு சாராரும் ஒன்றிணைந்துள்ளமையே தற்போதைய அரசியல் சூழலாகும்.

ஆகவே திருட்டு, துஸ்பிரயோகம் மற்றும் ஊழல் என்பவற்றை ஒழிக்க நாட்டில் ஒரு புதிய சக்தி உதயமாக வேண்டும். அவ்வாறு உதயமாகும் முன்னணியின் மூலம் இந்த இரு தரப்பினரையும் சிறையில் தள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொதுத் தேர்தலை நடத்த ஜூன் 20 திகதி முதல் 10 வாரங்கள் தேவை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதன்மூலம் புலப்படுவது என்னவென்றால் பாராளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என்பதே ஆகும்.’ என்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.