கடந்த ஏப்ரல் 30 முதல் மே 26 வரையான காலப்பகுதியில் பொதுமக்களுக்கு மத்தியில் பூஜ்ஜிய வைரஸ் பரவல் காணப்பட்டதை காரணம் காட்டியே இவ்வாறு கோவிட்19 பணிக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் தகவல்படி, ஏப்ரல் 30ஆம் திகதி முதல், இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட் 19 நோயாளிகள் கடற்படை சிப்பாய்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் என பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கடைசி தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.