ஜூன் மாதத்திற்கான கொரோனா நிவாரண நிதியான 5,000 ரூபா வழங்கப்படமாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கல்கிஸ்ஸையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரண நிதியான 5,000 ரூபாவை அடுத்த மாதத்திற்கு வழங்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதோடு, அரசாங்கத்திற்கும் நிதி ரீதியான பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, எதிர்வரும் ஜுன் மாதத்திற்கான 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படமாட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபா கொடுப்பனவானது, அரசியலை நோக்கமாக கொண்டு வழங்கப்படுவதாக பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரதேச மற்றும் கிராம அரசியல்வாதிகள் அனைவரையும் விலகிக்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்களுக்கு கடிதம் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.