இலங்கையில் கோவிட்19 வைரஸ் தொற்று காரணமாக கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் ஒலுங்குமுறைகளை பேணாத 229 பேர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகாண ரீதியாக நேற்று பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவ்வாறு சுகாதார விதிமுறைகள் மற்றும் சமூக இடைவெளியை பேணாதவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, சமூக இடைவெளியை பேணாத 40 பேரும், முகக்கவசம் அணியாத 189 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சட்டத்தை மீறும் ஒவ்வொரு தனி நபர் மீதும் இதுபோன்று கடுமையான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என மூத்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.