குறித்த 19 முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக நிதிமோசடிகளுக்கு எதிரான காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முக்கிய உறுப்பினர்களில் ரணில் விக்ரமசிங்க,மலிக் சமரவிக்கிரம, ரவி கருணாநாயக்க, தலதா அத்துகோரல, ராஜித சேனாரத்ன மற்றும் ஹரிசன் ஆகியோர் அடங்குவதாக மஹிந்தாநந்த தெரிவித்துள்ளார்.
மோசடி உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது நிதி மோசடிகளுக்கு எதிரான காவல்துறை அதனை விசாரணை செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டதாக மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.