ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் 19 அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் 19 அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை!

கடந்த அரசாங்கத்தின் 19 முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பதில் காவல்துறை அதிபர் உறுதியளித்ததாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த 19 முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக நிதிமோசடிகளுக்கு எதிரான காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முக்கிய உறுப்பினர்களில் ரணில் விக்ரமசிங்க,மலிக் சமரவிக்கிரம, ரவி கருணாநாயக்க, தலதா அத்துகோரல, ராஜித சேனாரத்ன மற்றும் ஹரிசன் ஆகியோர் அடங்குவதாக மஹிந்தாநந்த தெரிவித்துள்ளார்.

மோசடி உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது நிதி மோசடிகளுக்கு எதிரான காவல்துறை அதனை விசாரணை செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டதாக மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.