இலங்கையை இஸ்லாமிய நாடாக அறிவிக்க இருந்த திட்டம்! விஜேதாச ராஜபக்ஷ பரபரப்பு தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையை இஸ்லாமிய நாடாக அறிவிக்க இருந்த திட்டம்! விஜேதாச ராஜபக்ஷ பரபரப்பு தகவல்!

நான்கு கட்டங்களாக இலங்கையை இஸ்லாமிய நாடாக அறிவிப்பதற்கு ஜம் இயத்துல் உலமா சபை திட்டம் வகுதிருந்தது என்ற பரபரப்பு தகவலை முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜராகினார்.

அப்போது சாட்சியம் அளிக்கையில் அவர் மேற்படி கூறியுள்ளார்.

முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அடிப்படைவாதத்தை வளர்த்தார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய இப்ராஹிம் குடும்பத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நெருங்கி பழகியதாகவும் அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வைத்து இலங்கையின் பெளத்த பிக்கு ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் சிலோன் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் அப்துல் ராசிக் இருப்பதை அந்நாட்டு பொலிஸார் விசாரணையில் உறுதி செய்தார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.