தீவிரவாதிகளை தோற்கடிப்பது ஒன்றும் எமக்கு கடினம் அல்ல! கோட்டா செய்து முடிப்பார்! – கெஹலிய ரம்புக்வெல்ல

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீவிரவாதிகளை தோற்கடிப்பது ஒன்றும் எமக்கு கடினம் அல்ல! கோட்டா செய்து முடிப்பார்! – கெஹலிய ரம்புக்வெல்ல

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாத்தியமான வினைத்திறனான நடவடிக்கைகளை முன்னெடுப்பாரென இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை  ஜனாதிபதி பெரிதாகக் கருதவில்லை.

மேலும் முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்த எங்களுக்கு, தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் தீவிரவாதிகளை தோற்கடிப்பது கடினம் அல்ல.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒவ்வொரு சாத்தியமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார்.

இதேவேளை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த வெற்றியை நாம் பெற்றுள்ளோம். இந்நிலையில் வெற்றிப்பெற்ற கட்சிக்கு யாரும் மீண்டும் சவால் விடுவார்கள் என்று நாங்கள் நம்பவில்லை.

அத்துடன் இருக்கும் கட்சியின் அடையாளத்தையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

-Athavan News

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.