சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மற்றுமொரு நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மற்றுமொரு நபர் கைது!

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பயிற்சி பெற்றிருந்த மொஹமட் ஜெம்சிட் என்ற காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த தினத்தன்று கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அவரின் தொலைப்பேசி இலக்கத்தை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் பின்னர் இந்த பயங்கரவாதி குழுவுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (03) இரவு பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வயதுடைய மொஹமட் வசீம் என்ற அபூமஸ்வூட் என்ற மாவனெல்லை, பூடாவ வீதியை சேர்ந்த இளைஞன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

சந்தேகநபர் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பயிற்சிகளில் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.