ஆட்பதிவுத் திணைக்கள பணிகள் வழமைக்கு திரும்பியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆட்பதிவுத் திணைக்கள பணிகள் வழமைக்கு திரும்பியது!

ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் என்பவற்றின் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தில் ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் வழமை போல் இடம்பெறுவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 1,000 இற்கு மேற்பட்டோர் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிகளும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு வாரகாலமாக அரச துறை அதிகாரிகள் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பினால் குறித்த இரு நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.