இலங்கை அணியின் வெற்றியை கேள்விக்குறியாக்கிய ஷெஹான் ஜயசூரிய மற்றும் அவிஷ்க பெர்ணாண்டொ மோதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அணியின் வெற்றியை கேள்விக்குறியாக்கிய ஷெஹான் ஜயசூரிய மற்றும் அவிஷ்க பெர்ணாண்டொ மோதல்!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து  அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை  இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் செட் ரேன்ஸ் 3 விக்கெட்களையும் டிம் சௌதி மற்றும் ஸ்கெட் குக்லைன் ஆகியோர்  தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் 162 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

நியூஸிலாந்து அணி சார்பில் கிராண்ட் ஹோம் 59 ஓட்டங்களையும் டொம் புரூஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் அகில தனஞ்சய 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் இறுதி ஓவரில் ஷெஹான் ஜயசூரிய மற்றும் குசல் மெண்டிஸ் பந்து தடுப்பொன்றின் போது மோதியதால் இருவரும் காயங்களுக்கு உள்ளாகினர்.

3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 2 க்கு 0 என்ற நிலையில் நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.