‘டுவிட்டர்’ நிறுவனரின் கணக்கில் புகுந்து விளையாடிய ஹக்கேர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

‘டுவிட்டர்’ நிறுவனரின் கணக்கில் புகுந்து விளையாடிய ஹக்கேர்!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக ஊடகம் டுவிட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி.

இவர்தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் ஆவார்.

இவரது டுவிட்டர் கணக்கை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர்.

இவரது டுவிட்டர் கணக்கில் வி‌‌ஷமி யாரோ சட்டவிரோதமாக புகுந்து, 15 நிமிடங்கள் தொடர்ந்து மிகவும் ஆபத்தான, இனவெறி கருத்துகளை பதிவிட்டு விட்டார்.

இது அவரது டுவிட்டர் கணக்கை பின்பற்றி வருகிறவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இது குறித்து அறிந்ததும் உடனே அதிரடி நடவடிக்கை எடுத்து, பிரச்சினையை டுவிட்டர் நிறுவனம் சரி செய்து விட்டது.

ஆனால் யார் இப்படி செய்தது, இதற்கான பின்னணி என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும், ‘‘டுவிட்டர் அமைப்பில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை, மாறாக செல்போன் சேவை நிறுவனத்தின் பாதுகாப்பு மேற்பார்வை குறைபாடுதான் இதற்கு காரணம்’’ என டுவிட்டர் ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.

மேலும், ‘‘இந்த தவறால்தான் அங்கீகரிக்கப்படாத நபர் பதிவுகளை தயாரித்து, தொலைபேசி எண்ணில் இருந்து குறுஞ்சேவை தகவல்களாக டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு உள்ளார்’’ எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் செல்போன் சேவை நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.