நாவலபிட்டியில் பதற்றம் - காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாவலபிட்டியில் பதற்றம் - காரணம் இது தான்!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் போகீல் எட்டாம் கட்டை பகுதியில் கை குண்டு ஒன்றும் உதவி பொலிஸ் பரிசோதகரின் சீருடை ஒன்றும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் மீட்கபட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் இனங்காணபட்ட கை குண்டு மற்றும் சீருடை தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதே வேளை குறித்த கை குண்டினை செயழிலக்க செய்வதற்கு நாவலப்பிட்டி பொலிஸாரினால் கம்பளை விசேட அதிரடி படையினரை வரவழைக்க தகவல் வழங்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

குறித்த பகுதியில் மீட்கபட்ட கைகுண்டு எஸ்.எப்.ஜி 87 கொண்ட கைகுண்டு ஒன்றே இவ்வாறு மீட்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.