நிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்!



காலி முகத்திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (30) அன்று குடும்பமாக வந்த பெண்களில் 4 பேர், முகம் மூடும் விதமாக ஆடை (முகத்திறை/நிகாப்) அணிந்து வந்தார்கள் என்பதற்காக கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


அமுலில் இருந்த அவசரகால சட்டத்தின் கீழ், முகம் மூடும் விதமாக ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.


எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதிக்குப் பின்னர் அவசரகால சட்டம் தளர்த்தப்பட்டது. ஆனாலும் முகம் மூடும் சட்டம் தளர்த்தப்பட்ட விடயத்தில் இன்னமும் குழப்பங்கள் நீடித்து வருகிறது.


அந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் ஆசாத் சாலியின் தலையீட்டில் அவர்கள் பெண் போலீஸ் அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதன் பின்னர் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டு விடுவிக்கப்பட்டனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.