மரண தண்டனைக்கு எதிரான சட்டமூலத்துக்கு ஆதரவான மனுக்கள் நிராகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மரண தண்டனைக்கு எதிரான சட்டமூலத்துக்கு ஆதரவான மனுக்கள் நிராகரிப்பு!

மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக பந்துல லால் பண்டாரி கொடவினால் கடந்த முதலாம் திகதி பாராளுமன்றில் தனிநபர் சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன் பந்துல லால் பண்டாரி கொடவினால் சமர்ப்பிக்கப்பட் சட்டமூலத்தை சட்டமாக்குமாறு ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை பந்துல லால் பண்டாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையானது சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் தனக்கு அறிவித்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந் நிலையிலேயே மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.