ஜமாதே மில்லது பயங்கரவாத அமைப்பின் அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜமாதே மில்லது பயங்கரவாத அமைப்பின் அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர் கைது!


தடை செய்யப்பட்டுள்ள ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் அநுராதபுரம் மாவட்ட தலைவர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் கல்முனைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து அரச புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் நுவரெலியாவில் பயிற்சி பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது. தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள ஜே.எம்.ஐ. அமைப்பின் தலைவரின் கீழும் பயிற்சிகள் பெற்றவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.