அணு ஆயுத போருக்கு பிரியங்கா சோப்ரா உதவி - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அணு ஆயுத போருக்கு பிரியங்கா சோப்ரா உதவி - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ஐ.நா. நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு பாகிஸ்தான் பெண்மணி, அவரை பார்த்து நேரடியாக குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்ததை வாழ்த்தி பிரியங்கா போட்ட ‘டுவிட்டர்’ பதிவை அப்பெண் சுட்டிக்காட்டினார். “நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள், பாகிஸ்தானுக்கு எதிராக அணுஆயுத போரை தூண்டி விடலாமா?” என்று அவர் கேட்டார்.

அதை பொறுமையாக கேட்ட பிரியங்கா, “நான் போரை தூண்டக்கூடிய ஆள் அல்ல. ஆனால் எனக்கு தேசபக்தி இருக்கிறது. பாகிஸ்தானில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். என்னை நேசிக்கும் அவர்களின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன்” என்று கூறினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.