
பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்ததை வாழ்த்தி பிரியங்கா போட்ட ‘டுவிட்டர்’ பதிவை அப்பெண் சுட்டிக்காட்டினார். “நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள், பாகிஸ்தானுக்கு எதிராக அணுஆயுத போரை தூண்டி விடலாமா?” என்று அவர் கேட்டார்.
அதை பொறுமையாக கேட்ட பிரியங்கா, “நான் போரை தூண்டக்கூடிய ஆள் அல்ல. ஆனால் எனக்கு தேசபக்தி இருக்கிறது. பாகிஸ்தானில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். என்னை நேசிக்கும் அவர்களின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன்” என்று கூறினார்.