மட்டக்களப்பில் பதற்றம்; தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை புதைக்க முற்பட்டதால் கொதித்தெழுந்த மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மட்டக்களப்பில் பதற்றம்; தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை புதைக்க முற்பட்டதால் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டம் காரணமாக மட்டக்களப்பு – திருகோணமலை உட்பட பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தமையினால் இந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது ஆதவன் பிராந்திய செய்தியாளர் கூறினார்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிப்பு – மட்டக்களப்பில் பதற்றம்

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளமையினால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு இந்து மயானத்தில் தாக்குதல் தாரியான மொஹமட் அஸாத்தின் உடற்பாகம் புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27) போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது வீதிகளில் டயர்கள் எரிந்து போராட்டம் இடம்பெறுவரும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.