ஈஸ்டர் குற்றவாளிகள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் - இராணுவ தளபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் குற்றவாளிகள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் - இராணுவ தளபதி

ஈஸ்டர் தாக்குதலுடன் தோடர்புபட்ட குற்றவாளிகள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவார்கள். சந்தேக நபர்கள் எவராக இருந்தாலும் கைதுகள் தொடரும். இந்த அமைப்பின் பின்னணி குறித்த புலனாய்வுத்துறை தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றது எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக. நல்லூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் வடக்கின் இராணுவ குவிப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு பதில் கூறும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு மாதங்கள் கடந்தாலும் இன்னமும் கைதுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கை தொடரும். கைதுகள் நிறுத்தப்படாது. அத்துடன் இந்த பயங்கரவாத அமைப்பு குறித்த தேடுதல் நடவடிக்கைகளை எமது புலனாய்வுத்துறை முன்னெடுத்து வருகின்றது.

எதிர்காலத்தில் எமக்கு பல சவால்கள் உள்ளது. இனிமேல் நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடவேண்டிய நிலைமை உள்ளது. இந்த எதிரிகள் யுத்த பூமியில் இல்லை. மக்களுடன் மக்களாக உள்ளனர். ஆகவே அவர்களை இனங்காணும் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.