
சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கு விசாரணை, விக்கும் களுஆராச்சி, தம்மிக கணேபொல மற்றும் அதித்ய படபெந்தி ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் குற்றவளிகள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபா ரொக்கப் பிணையும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 3 நீதிபதிகள் கொண்ட குழுவினர் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

