அலி ரொஷான் மற்றும் 7 பேருக்கு பிணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலி ரொஷான் மற்றும் 7 பேருக்கு பிணை!

சட்ட விரோதமான முறையில் யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் மற்றும் 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கு விசாரணை, விக்கும் களுஆராச்சி, தம்மிக கணேபொல மற்றும் அதித்ய படபெந்தி ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் நடைபெற்றது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் குற்றவளிகள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபா ரொக்கப் பிணையும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னர் 3 நீதிபதிகள் கொண்ட குழுவினர் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.