நல்லூர் ஆலய வளாகத்தில் 3 முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நல்லூர் ஆலய வளாகத்தில் 3 முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லீம் இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிசாரினால் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

குறித்த மூன்று முஸ்லிம் இளைஞர்களும் நேற்று இரவு 10 மணி அளவில் ஆலய வளாகத்துக்குள் நடமாடியதனால் சந்தேகத்தின் பேரில் குறித்த மூன்று முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் கைதுசெய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.