2010 மற்றும் 2015 ஆண்டுகளில் முட்டாள் தனமான வேலைகளை செய்தோம்.! -அமைச்சர் தலதா அத்துகோரள

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2010 மற்றும் 2015 ஆண்டுகளில் முட்டாள் தனமான வேலைகளை செய்தோம்.! -அமைச்சர் தலதா அத்துகோரள

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவது உறுதி என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கம்பெரலிய திட்டத்தின் மூலம் சுமார் 48000 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பலங்கொட மேல் தஹமான வீதியை திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தலதா அத்துகோரள, பல சிரமங்களுக்கு முகம்கொடுத்தே நாம் இந்த அரசாங்கத்தை அமைத்தோம். ஆட்சியமைத்து மூன்று மாதங்களில் குப்பை மேடு சரிந்து விழுந்தது. அதேபோல் கடந்த வருடம் மஹிந்தவை பிரதமராக்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி செய்த ஜனநாயக விரோத செயற்பாடு இடம்பெற்றது.

எனவே, இனிமேல் வேறு வெளிநபர் ஒருவருக்கு வாக்களிக்க போவதில்லை. 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் முட்டாள் தனமான வேலைகளை செய்தோம். ஆனால் இந்த முறை நாம் சஜித் பிரேமதாஸவை எப்படியாவது கொண்டு வருவோம். அதுதொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம். காரணம் பிரதமர் நல்லவர்.

அவரின் முதிர்ச்சிமிக்க தலைமைத்துவத்தை நாம் மதிக்கின்றோம். பிரேமதாஸ தான் துன்புற்றவர்களை தேற்றி ஏழை எழியவர்களுக்கு உதவி செய்தார். அவரின் நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கின்றேன் என்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.