தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் பரீட்சை அனுமதிச் சீட்டை இணையத்தில் பெறலாம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் பரீட்சை அனுமதிச் சீட்டை இணையத்தில் பெறலாம்

க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதிச் சீட்டை இணையத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. 

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் சகல பரீட்சார்த்திகளுக்குமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுவிட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறினார். 

பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் அவர்களின் விலாசத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

எதிர்வரும் புதன்கிழமை தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதிச் பத்திரம் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் உட்சேர்க்கப்படும் என்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் அதனூடாகவும் தங்களது அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். 

இம்முறை உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 05ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.