இலங்கை கிரிக்கட் சபையில் திடீர் மாற்றங்கள்! - பயிற்றுவிப்பாளர் பதவி விழகுவாரா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கட் சபையில் திடீர் மாற்றங்கள்! - பயிற்றுவிப்பாளர் பதவி விழகுவாரா?

இலங்கை கிரிக்கெட் சபையில் பல்வேறு மாற்றங்களை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற உள்ள ஒருநாள் போட்டி தொடரின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களை அவர்களது பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவிக்கவுள்ளேன்.

இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன் பின்னர் அவர்களின் ஒப்பந்தம் தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறும் அவர் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத் தொடரில் எதிர்கொண்ட தோல்வி, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.