நவீன தொழில்நுட்பங்களுடனான நாடாக கட்டியெழுப்பப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நவீன தொழில்நுட்பங்களுடனான நாடாக கட்டியெழுப்பப்படும்!

அறிவில் வளர்ச்சி கண்ட தேசிய நாடு என்ற ரீதியில் கல்வி துறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதன் மூலமே உலகின் அறிவு வளர்சியை கொண்ட நாடாக இலங்கையை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

இதற்காக கல்வி துறையை நவீன மயப்படுத்தி கணனி மய கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சில்பசேனா கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு அமைச்சினால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. சுற்றுலா தெழில் துறையை விஞ்ஞான தொழில் நுட்பத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு நாம் திட்டம் வகுத்துள்ளோம். இதற்கு அடிப்படை ரீதியில் கல்வியை கட்டி எழுப்ப வேண்டும். 

இவை அனைத்தையும் மேற்கொள்வதற்கு கிராம மட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதற்காக கம்பரெலிய என்டர் பிரைஸ் சிறிலங்கா என்ற வேலைத்திட்டங்கள் ஊடாக நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்வோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.