சித்தப்பா மற்றும் மகள் சண்டை - மகள் பலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சித்தப்பா மற்றும் மகள் சண்டை - மகள் பலி

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் பகுதியில் நபர் ஒருவரினால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று காலை 10.30 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரையும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பாலசிங்கம் ஹரிதா எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தாக்குதலுக்குள்ளான இருவரின் சித்தப்பாவினால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.