இ.போ.ச அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இ.போ.ச அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு!

இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்க பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தின் பிரச்சினைகளை நிதியமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்தின் சம்பள மற்றும் பதவி உயர்வு தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கைக்கு அமைய தீர்ப்பதற்கு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாறசிங்க நேற்று (13) மாலையில் சகல பஸ் சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ஆகியோருடன் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் சம்பள ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.