
இது தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நிறுவகத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், அது தொடர்பில் வௌியிடப்படும் அறிக்கைக்கு இணங்க செயற்படுமாறு பொதுமக்களை அறிவுறுத்துவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் காற்றுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.