
குறித்த மனுக்கள் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த மனுக்களை தேசிய முக்கியத்துவம் மிக்க மனுக்களாக கருத்திற்கொண்டு, அவற்றை நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

