யாழில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி!

யாழ், உடுவில் பிரதேச சபைக்கு உட்பட்ட, குப்பிழான் பகுதியில் இன்று (16) மாலை 2.30 மணியளவில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் மின்னல் தாக்கியதில் கொல்லப்பட்டனர்.

இந்த மின்னல் தாக்குதல் புகையிலை பயிர்ச்செய்கை ஒன்றிற்கு அருகே இடம்பற்றுள்ளதாக ஊடகளங்களுக்கு செய்தி கிடைக்கப்பெற்றன.

சம்பவ இடத்தில் மழை அதிகமாக பெய்த காரணத்தால் குறித்த தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த நால்வரும் அருகில் இருந்த தென்னை மரத்திற்கு கீழால் ஒதுங்கியுள்ளனர், பின்னர் அதில் ஒருவர் மதிய உணவுக்காக வீடு செல்வதாக கூறிவிட்டு திரும்பி வந்து நோக்கும் போது மூவரும் மின்னல் தாக்கியதில் பலியாகியிருந்தனர்.

இறந்தவர்கள் 48 வயதான கண்ணன், 52 வயதான கண்தவாமி மைனாவதி மற்றும் 38 வயதான ரவிகுமார் சுதா என அடையாளம் காணப்பட்டனர்.

பலியானவர்களின் உடல்கள் இப்போது யாழ்ப்பாண ஆதார மருத்துவமனையில் பிந்தைய மரண ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இறந்தவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த குப்பிழான் தெற்குப்பகுதியில் குடியிருப்போர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.