41 லட்சம் பெருமதியான வெளிநாட்டு சிகெரெட்டுகளுடன் கைதான இலங்கை பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

41 லட்சம் பெருமதியான வெளிநாட்டு சிகெரெட்டுகளுடன் கைதான இலங்கை பெண்!

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் 27 வயதுடைய வேவல்தெனிய பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்கப்பட்டது. குறித்த பெண்ணிடம் இருந்து 2174 சிகெரட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மற்றையவர் 25 வயதான மாத்தறை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரிடம் இருந்து 1995 சிகெரட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த இருவரிடம் இருந்து 4170 சிகெரட் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 4,169,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.