
அவர்களில் ஒருவர் 27 வயதுடைய வேவல்தெனிய பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்கப்பட்டது. குறித்த பெண்ணிடம் இருந்து 2174 சிகெரட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மற்றையவர் 25 வயதான மாத்தறை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரிடம் இருந்து 1995 சிகெரட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த இருவரிடம் இருந்து 4170 சிகெரட் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 4,169,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

