இன்று (22) புத்தளத்தில் நடந்தது என்ன? தாக்குதல் நடத்தியவர் யார்? (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று (22) புத்தளத்தில் நடந்தது என்ன? தாக்குதல் நடத்தியவர் யார்? (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

புத்தளம் வருகைதந்த ஜனாதிபதியை சந்திப்பதற்காக அவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக தபால் நிலையம் முன்பாக நாம் ஏட்பாடு செய்த இந்த "கவனயீர்ப்பு அமைதிப்பேரணி" போலீஸின் அழுத்தத்தினால் போராட்டமாக மாறியது. ஜனாதிபதி ஷக்தி மைதானத்துக்கு வருவார் என்று தெரிந்தும் அங்கு செல்லாமல், AGA காரியாலயம் வருவார் என்று தெரிந்தும் அங்கு செல்லாமல், புத்தளம் மாவாட்ட மைதான வாசலில் சென்று போராட்டம் செய்தது முதல் போராட்டம் செய்ய வந்தவர்களை கால்பந்தாட்ட போட்டிக்கு அழைத்தது வரை அத்தனையும் அரசியல் நாடகங்களே.

இடையே தனிப்படட கோபதாபங்களை வைத்து முகப்புத்தக நேரலைகளில் மிக மோசமாக ஒரு சில அரசியல்வாதிகளை பேசியதும், கேவலமாக தூற்றுவதும் என பல மனித தவறுகளும் ஏட்பாட்டில் இருந்தது.

இப்படி எது நடந்தாலும், எந்த அரசியல் உள்நோக்கும் இல்லாமல் பங்குகொண்ட நம் ஊரின் பெண்கள், ஆண்கள், மாணவர்கள், சிறுமிகள், வயோதிபர்கள் என எல்லோரும் எதிர்ப்பார்த்த ஜனாதிபதியின் சந்திப்பு தவிடுபொடியாகி இருக்கிறது.

"ஜனாதிபதியை சந்திக்க 5 பேர் கொண்ட குழு செல்கிறது" என்ற சத்தம் கேட்டதும், நாம் சந்தோசப்பட்டோம், ஆனாலும் குழுவை ஏற்றிச்சென்ற நபர் அந்தக்குழுவை அந்தரத்தில் விட்டு விட்டு கொழும்பு நோக்கி சென்றிருக்கிறார்.


ஜனாதிபதி புத்தளம் மாவட்ட மைதானத்தையும் திறந்துவைக்கவும் வரவில்லை, இரவு கதைப்போம் என்று வொய்ஸ் கட் கொடுத்த நகர தலைவர் கலந்துரையாட சந்தர்ப்பமும் கொடுக்கப்படவில்லை. கதைப்போம் என்று சொன்னவர்களும் கதைக்க முடியாமல் போனது, கதைக்கப்போகிறோம் என்று சென்றவர்களுக்கு கதைக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் இருக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி தற்போது இந்த போராட்டம் போலிஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறி "நாளைய தக்பீர் அல்லாஹு அக்பர்" என்ற முழக்கத்தோடு திசை மாறுகிறது. சிறந்த முடிவுகள் எடுக்கப்பட்டு அது ஜும்மாவின் பின்னால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.


(புத்தளம் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய போது)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.