உலப்பன சுமங்கல தேரருக்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலப்பன சுமங்கல தேரருக்கு விளக்கமறியல்!


ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசான் அமரசேன, இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.


நாரஹேன்பிட்டி, தாபரே மாவத்தையில் உள்ள பல குடிசை வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் நீதிமன்றில் முன்னிலையான கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் அதிபருமான உலப்பனே சுமங்கல தேரர் நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாத காரணத்தினால் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அறிவித்த நீதவான், சந்தேகநபர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி பரீட்சைக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதால் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அறிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.