26 வயது யுவதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

26 வயது யுவதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!


சீதுவ, முத்துவடிய பிரதேசத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் கூரிய பொருளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த பெண் நேற்று (14) இரவு தங்கும் விடுதியின் அறைக்குள் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


உயிரிழந்தவர் பலுகொல்லேகம மெகொடவெவ பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தகாத உறவில் ஈடுபட்ட ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


கொலையை தொடர்ந்து பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்) 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.