![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnef27JXo4MxIp7dw5v92p1jADl5D12BUgjncNG9t1t5n3dQLx_N90hh_vShf_Wnu5TB4QhISHojDO4OKJjeLrY4yy6kVG6N3gWXSQ4Oa5udA226OTcSwR-WBq4Z2rguWpGOQWSNpC9ufhQDBEhdexzoliBJgOvovagHjPdOp5mX5JfceDQSsTBJqJ9NAo/s16000/IMG_9846.jpeg)
குறித்த பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருத்தப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கையை பாடசாலைகள் ஆரம்பிக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சு, தமது பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலைகளிலேயே படிவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 07, 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWloaRDqLAcs8VZuNMo8gC5ojStHiP9PUN5wwRyVxtq0lZ8dBuA2kHWfeCY9gMxCrP2zQWn55oDnqXumZttcTUbEopwGKpnQUDC65Ax6FELGq0nTKhfKFsnHQu7v1-IjSmLu5a1tUB7IdoyXEfzPpIus1XD3274OiCwEaQbVsBzoiqWJGstRF_So42Be6Y/s16000/IMG_9845.jpeg)