புலமை பரிசில் பரீட்சை 2023 - கல்வி அமைச்சின் அறிவிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமை பரிசில் பரீட்சை 2023 - கல்வி அமைச்சின் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருத்தப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கையை பாடசாலைகள் ஆரம்பிக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சு, தமது பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலைகளிலேயே படிவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 07, 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.