
அம்மானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கூற்றுப்படி, இக்குழு, அவர்களின் சம்பள நிலுவைகள், சமூக பாதுகாப்பு சலுகைகள் மற்றும் பிற உரிமைகளுடன், ஜோர்டானில் உள்ள இலங்கை தூதரகத்தால் ஜோர்டானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் திருப்பி அனுப்பப்பட்டது.
ஜோர்டானிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து எஞ்சிய இலங்கை ஊழியர்களையும் கூடிய விரைவில் நாடு திரும்புவதற்கான முயற்சிகள் தொடரும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
எஞ்சியிருக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் நலன்கள் அவர்கள் நாடு திரும்பும் வரை உறுதிசெய்யப்படும் என இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.