10 வயது சிறுமி கொலை தொடர்பில் ஐவரிடம் விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 வயது சிறுமி கொலை தொடர்பில் ஐவரிடம் விசாரணை!


தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியல் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


இதற்கான உத்தரவை மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத் இன்று (29) வழங்கினார்.


தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பெப்ரவரி 16ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரை கடந்த 19 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டார்.


இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத் முன்னிலையில் ஆஜர்ப் படுத்தினர்.


இதன்போது உயிரிழந்த சிறுமியின் தாய், தந்தை, அம்மம்மா உள்ளிட்ட 5 பேரிடம் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.


குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் வழக்கு விசாரணையையும் அன்றைய தினத்துக்கு தவணையிட்டார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.