SLPP முன்னாள் மேயருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

SLPP முன்னாள் மேயருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை!


குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


துஷார சஞ்சீவ, குருநாகல் / யாபஹுவ இராச்சிய சகாப்தத்தில் இருந்த, 13 ஆம் நூற்றாண்டின் அரசர் நீதிமன்றத்தை, வீதி அபிவிருத்தித் திட்டத்திற்காக இடித்துத் தரைமட்டமாக்கினார்.


குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உட்பட நால்வருக்கு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று (14) தண்டனை விதித்துள்ளது.


குருநாகலின் முன்னாள் மேயர் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் சேர்ந்து 2020 ஜூலையில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்காக கட்டிடத்தை இடித்தார்.


தொல்பொருள் திணைக்களம் அதன் மேற்பார்வையில் இருந்த 13 ஆம் நூற்றாண்டு அரச நீதிமன்றத்தை துஷார சஞ்சீவ இடித்ததாகக் கூறி, குருநாகல் பொலிஸில் அப்போது முறைப்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.