பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் நிறைவேறியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் நிறைவேறியது!


பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) மாலை 4.50க்கு விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு 57 வாக்குகள் மேலதிகமாக அளிக்கப்பட்டன.

தற்போது பாராளுமன்றத்தில் குழு நிலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த திருத்தங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பு கோரினர்.

வாக்கெடுப்பின் போது சபையில் இல்லாதவர்கள், பெயர் குறிப்பிட்டு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் பெயரும் அழைக்கப்பட்டது.

அப்போது ஒலிவாங்கி முடுக்கிவிடப்பட்டமையால், "இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையுயர்த்தியவர்களுக்கு ஆணி அடிக்கவேண்டும்" எனக்கூறி அமர்ந்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.